63 இதழ்கள்
1953 ல்
தமிழ் என்னத்தவம்
தவம் செய்ததோ?
தவம் செய்ததோ?
பெண்ணீன்ற மகரெல்லாம்
கண் மூடி மண் தேட
மண்ணீன்று தந்ததம்மா
பெண்ணொருத்தி கருவொன்றை
கண் மூடி மண் தேட
மண்ணீன்று தந்ததம்மா
பெண்ணொருத்தி கருவொன்றை
பாரதியெனும் பிள்ளை
பறிபோன ஏக்கமொன்றில்
பரிதவித்தத் தமிழ்த் தாயின்
மார் மீண்டும் சுரக்குதம்மா
பால் மண்வாசம் வீசுதம்மா
பறிபோன ஏக்கமொன்றில்
பரிதவித்தத் தமிழ்த் தாயின்
மார் மீண்டும் சுரக்குதம்மா
பால் மண்வாசம் வீசுதம்மா
விறகுக் குச்சி விருச்சமாச்சே
காடு மலை கவிதையாச்சே
கண்டதெல்லாம் பாட்டான வேளையிலே
தெம்மாங்கொன்னுக்கு கோவமாச்சே
காடு மலை கவிதையாச்சே
கண்டதெல்லாம் பாட்டான வேளையிலே
தெம்மாங்கொன்னுக்கு கோவமாச்சே
கோழியோடு கொஞ்ச நேரம்
கோமியத்தில் கொஞ்ச நேரம்
சோளக்காட்டில் கொஞ்ச நேரம்
சொட்டப் பாறையில் கொஞ்ச நேரம்
அய்த்த மடியில் ஆசிரியப்பா
வெறும் தரையில் வெண்பா
கால் வயிற்றில் காப்பியங்கள்
ஆத்து மண்ணில் அடுக்குத் தொடர்
பொட்ட வெளியில் புறநானூறு
அந்தி வானில் அகநானூறு
கோமியத்தில் கொஞ்ச நேரம்
சோளக்காட்டில் கொஞ்ச நேரம்
சொட்டப் பாறையில் கொஞ்ச நேரம்
அய்த்த மடியில் ஆசிரியப்பா
வெறும் தரையில் வெண்பா
கால் வயிற்றில் காப்பியங்கள்
ஆத்து மண்ணில் அடுக்குத் தொடர்
பொட்ட வெளியில் புறநானூறு
அந்தி வானில் அகநானூறு
தமிழ் வளர்ந்த சங்கதி கேளு
தமிழ் சங்கமறியா சங்கதி கேளு
தமிழ் சங்கமறியா சங்கதி கேளு
திருத்தப்பட்ட தீர்ப்புத் தீயன்
தவிக்கவிட்ட தண்ணீர் தேசன்
கள்ளிக்காட்டுக் கதாநாயகன்
கருவாச்சிகளின் கண் துடைத்தவன்
கவிராஜன் கைபிடித்தவன்
காதலர்களின் கனவு படைத்தவன்
தவிக்கவிட்ட தண்ணீர் தேசன்
கள்ளிக்காட்டுக் கதாநாயகன்
கருவாச்சிகளின் கண் துடைத்தவன்
கவிராஜன் கைபிடித்தவன்
காதலர்களின் கனவு படைத்தவன்
ஆத்தா கவிதையில் அழுதப்போ
தடுக்கப் போன தமிழ் கூட உறைஞ்சதம்மா
தடுக்கப் போன தமிழ் கூட உறைஞ்சதம்மா
தமிழச்சியின்
பிரசவம்
பிசுபிசுப்பு
உதிரம்
உன்னதம்
உனை படித்து உணர்ந்த போது
பிரசவம்
பிசுபிசுப்பு
உதிரம்
உன்னதம்
உனை படித்து உணர்ந்த போது
பெத்தவ கால் தொட தலை போச்சே
கட்டுனவ பாதம் தொட்டு கண்ணீர் போச்சே
கட்டுனவ பாதம் தொட்டு கண்ணீர் போச்சே
முள்ளி வாய்க்கால் போகச் சொன்ன,
உசுரு திரும்ப வந்ததா நினைவில் இல்ல
மூன்றாம் உலகப்போரில் நீ வெடிச்ச
மூணு வேள சோறு கூட இறங்கவில்ல
உசுரு திரும்ப வந்ததா நினைவில் இல்ல
மூன்றாம் உலகப்போரில் நீ வெடிச்ச
மூணு வேள சோறு கூட இறங்கவில்ல
வானம் உனக்கு போதி மரம்தான்
அதை நீயே வச்சுக்கோ
நான் இன்னும் உன் முழங்காலை
கூடத் தாண்டவில்லை
எங்கே வானத்தை நோக்க?
அதை நீயே வச்சுக்கோ
நான் இன்னும் உன் முழங்காலை
கூடத் தாண்டவில்லை
எங்கே வானத்தை நோக்க?
ஒரு முறையேனும் நீ கவிதை
வரைதலை காண வேண்டும்
இந்தத் தமிழ்க் காரிக்கு
என்ன ஓரவஞ்சனை என்றறிய
வரைதலை காண வேண்டும்
இந்தத் தமிழ்க் காரிக்கு
என்ன ஓரவஞ்சனை என்றறிய
பூங்காத்து திரும்புமானு
ஏக்கம் கொண்டாயே,
பூலோகமே திரும்பி ரசிக்குதே
பூபாளம் மெலிதாய் இசைக்குதே
ஏக்கம் கொண்டாயே,
பூலோகமே திரும்பி ரசிக்குதே
பூபாளம் மெலிதாய் இசைக்குதே
ஆயிரமாயிரம் ஆண்டுகள்
சூல் கொண்டிருந்த தமிழ் மலருக்கு
இன்றைக்கு 63 இதழ்கள்
அழகாகத்தான் இருக்கிறது
நேற்று பிறந்ததைப் போல
சூல் கொண்டிருந்த தமிழ் மலருக்கு
இன்றைக்கு 63 இதழ்கள்
அழகாகத்தான் இருக்கிறது
நேற்று பிறந்ததைப் போல
வயதாக முடியுமா என்ன !!!
-அருள்
கருத்துகள்