இடுகைகள்

ஜூன், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"நீ"

படம்
முதல் காதல் நினைவு முத்தமிடும் குழந்தை முழு நிலவின் தென்றல் தந்தையின் தோழைமை தாய் வருடும் முடி தோழியின் மடி நண்பனின் கடன் மனைவியின் பாதம் கணவனின் கண்ணீர் தூரத்து மெல்லிசை பூக்களின் கூட்டம் நடுக்கடல் சப்தம் வானம் பார்த்த உறக்கம் முதல் வெற்றி ஆழ்ந்த அமைதி துரோகம் தரும் புன்னகை எதிரியின் உதவி மறுக்கப்பட்ட மன்னிப்பு மறக்கப்பட்ட நன்றி மாறி விட்ட உறவுகள் கடைசித் தீண்டல் கலைந்த கனவு மனமறிந்த பொய் உதடு புதைக்கும் மெய் உள்ளங்கை தரும் தைரியம் காமம் தீர்ந்த கலவி பிரசவத்தின் நிர்வாணம் மரணத்தின் நிறைவு தனிமை வறுமை ஏமாற்றம் பசி இவற்றின் முன் உணரப்படும் உன் செயல்கள் தான் உண்மையான "நீ" -அருள்

காதல் அளவீடு

படம்
தொட்ட சுகம் போதுமென்றால் முத்தமொன்றில் அளந்திடலாம் இட்ட முத்தம் போதுமென்றால் இதழோரம் அளந்திடலாம் இதழின் ஓரம் போதுமென்றால் இன்னொரு பிறவியெடுத்தேனும் அளந்திடலாம் இதயமதில் நட்டுச் சென்ற காதலை எங்ஙனம் அளந்திடுவேன்? கண் மயங்கி கருவி தேடி என்னம்மா நான் கூற என்று எண்ணியிருந்த பொழுதினிலே கண்ணம்மா கவிதை ஒன்று கனவு தட்ட கண் விழித்தேன் கவிராஜன் நினைவு கொண்டே கை நெட்டி நானுடைத்தேன் அவனறிந்த மொழிதனிலே தமிழினிமை எங்குமிலையாம் அவனையறிந்த என்னிடமும் தமிழினிமை தவிர்த்தெதுவோ? பிரபஞ்சம் பேசும் பெருந்தமிழே மௌனமாய் இரு சில நிமிடம் இது காதல் அளவீடின் கணிதத் தேர்வு நேரம் கவனங்கள் தேவை தேர்வு முடிவுகள் தேவதையிடம் சேர்க்கப்படும். -அருள்

அன்னை என்னும் சிலுவை

படம்
நிலமடியில் விதையென சுமந்து அடிவயிற்றில் அடைகாத்து துளிரென கிழிக்கும் போதும்  தூய முத்தம் தூவி எடுத்து மலை மேக மார் சுரந்து இதழோரம் ஈரம் சேர்த்து தென்றலாய் உடல் வருடி காற்றியல்பாய் கதை சொல்லி நிலவோடு சண்டையிட்டு நின் சேலையெனும் சோலை சூழ்ந்து செடியாகும் வேளையிலே கொடியாக நிழல் தந்து வேராக நீ மறைய சீராக நான் வளர்ந்தேன் மொழி தந்து ஊமையானாய் வலி பெற்று உவகை கொண்டாய் உலகம் உணர்த்தி ஒதுங்கிப் போனாய் உதறிப் போனேன் உயிர் நொந்தாய் ஊட்டிவிடும் போது தெரியவில்லை நீ பசியாறவில்லையென்று மடி விழும் போது தெரியவில்லை நீ மனமுடைந்தாய் என்று தேற்றிவிடும் போது தெரியவில்லை நீ அழுதாய் என்று ஏற்றி விடும் போதும் தெரியவில்லை நீ மிதிக்கப்பட்டாய் என்று வலி தாங்கி வலி தாங்கி சிலையாகிப் போனவளே உனது உளி நானென்ற உண்மையை மறைத்ததேனோ? புண்ணியங்களில் புதைந்து பூ மாலையானவளே உன் புண்களை யாரறிவார்? கண்ணீர், காய்ச்சல், காலிடை உதிரம் எனது காலை உணவுகளுக்குப் பின்னால் எத்தனைப் போர்க்களங்கள்? வறண்டு போகட்டும் உன் தியாக புதைகுழிகள்​ வருகின்ற காலத்திலாவது வேர்களில் வெளிச்சம் விழட்டும் கருப்பை வரதட்சணை பெற்று க...

நிறைய ரசி கொஞ்சம் வாழ்

படம்
எங்கோ கேட்கும் இசையுடன்  இணையும் இதழ் காலை முளைக்கும் இளம் தூக்கம் இரவு அழுகை துடைக்கும் இதமான புத்தகம் சன்னலோர மழையில் சட்டென்று தோன்றும் கவிதை மண் தவழும் குழந்தையின் பின் தொடரும் தந்தை பூ வைத்த பெண் அவள் தொட்ட காற்று நீண்ட நடையில் நெருங்கிய விரல்கள் கல்லூரி வாசல் கடக்கும் போது ஏக்கம் மாறிய பள்ளிச் சீருடை மாறாத ஆசிரியர் சிறு வயதுத் தோழியின் அதே பாசம் நெடுநாள் கோபம் கலையும் சிறிய புன்னகை மறந்த முகங்களின் சிறந்த குணங்கள் கொஞ்சம் தேநீர் தரும் நிறைய நிம்மதி உப்பில்லா சமையலின் தப்பில்லா அன்பு உடைந்த மனத்தை ஒத்தடம் கொடுக்கும் முத்தம் முதல் வேலையின் முதல் நாள் பெரும் வெற்றி தரும் சிறு கண்ணீர் ஐம்பது வயதில் அம்மாவின் மடி எண்பது வயதின் கலங்கமில்லாக் கலவி அயர்ந்த தூக்கம் அதோடு மரணம் ரசிக்கக் கற்றுக் கொள் வாழ்வது எளிது -அருள்

நாய் குட்டியும் நான்கு மிட்டாய்களும்

படம்
ஐந்து வயதென்று அறியும் முன்னே அந்த மிட்டாயை ஒளித்து வைத்தாளாம் பொம்மை நாய் குட்டிக்கு பசி என்பாளாம் ஈரைந்து வயதடைந்த போது, தாய்மை வேடம் தரித்திடுவாளாம் தம்பி பாப்பா தன் பாப்பா என்றிடுவாளாம் ஈறாரை எட்டியதும், தனிக் குளியலறை கண்டிடுவாளாம் தன் வெட்கம் கண்டு அஞ்சிடுவாளாம் பதினைந்தில் பதிந்த போது, காலிடை உதிரம் கண்டு உறைந்திடுவாளாம் கன்னி எனும் மீளா நிலை அடைந்திடுவாளாம் பதினெட்டெனும் மாற்றுத்திறனிடத்தே இவள் பட்டாம்பூச்சியாம், சிறகுகள் சிதைப்பதற்கென்றே முளைத்த மார்பேனும் சிறையே சாட்சியாம் இருபதெனும் இன்னல், இவள் இருதலைக் கொல்லியாம் அதன் அறிகுறி காதெலெனும் உயிர்க் கொல்லியாம் குடும்பம் என்னும் குட்டை நாடு, இவள் அடக்கல் தேசமாம் அங்கு கூச்சம் எனும் பொய் இவள் அணிந்த தேகமாம் இரு பதினொன்று கணக்கிற்கு எளிதாம் கன்னிக்கு கடிதாம் கனவெனும் கானகம் அளித்து கல்யாணம் எனும் மழை வேண்டும் காலமதாம் இரு பன்னிரண்டு இரட்டை, எனும் இரைச்சலோசையாம் இவள் வாழ்க்கை எனும் அமைதியை கெடுத்த குறட்டை பாஷையாம் இருபத்தியாறு எனும் வறண்ட நிலமாம் வற்றாத நதி இவளை குடித்தது பிள்ளை என்னும் கனமாம் மு...